சட்டவிரோதமான மின் கொள்வனவினால் 08 கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சட்டவிரோதமான மின் கொள்வனவினால் 08 கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு!

சட்டவிரோதமான முறையில் மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டமையால்,  08 மாதங்களில் கிட்டத்தட்ட 08 கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 

சிலர் மின்சார மீட்டர்களை மாற்றியமைத்ததாலும், பல்வேறு சாதனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாலும் உரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக சபை குறிப்பிடுகிறது. 

 இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை வாரியத்துக்கு  மின்சார மீட்டர் மாற்றங்கள் தொடர்பாக 1,041 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனால் இலங்கை மின்சார சபைக்கு 07 கோடியே 64 இலட்சத்து 27 ஆயிரத்து 649 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி மின் கம்பிகளில் பல்வேறு சாதனங்கள் பொருத்தப்பட்டமை தொடர்பில் 81 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் 26 இலட்சத்து 47 ஆயிரத்து 207 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் அவர்களிடமிருந்து 36 இலட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4