இலங்கையில் இதுவரை கண்டறியப்படாத அரிய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

#SriLanka #Polonnaruwa
PriyaRam
2 years ago
இலங்கையில் இதுவரை கண்டறியப்படாத அரிய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டாத மிகவும் அரிதான மற்றும் மிகப்பெரிய கல்வெட்டு, வரலாற்று சிறப்புமிக்க பொலன்னறுவை திம்புலாகல ஆரண்ய சேனாசன மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தொல்பொருள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் தலைமையகத்தின் கல்வெட்டுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலன்னறுவை தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் இந்த அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/11/1699522743.jpg

இந்த கல்வெட்டை நகலெடுக்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் உரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் திம்புலாகலை மலைத்தொடரில் தங்கியிருந்து கடந்த 26ஆம் திகதி முதல் கல்வெட்டைப் பிரதி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கல்வெட்டு சுமார் 45 அடி நீளமும் 18 அடி அகலமும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4