சீசெல்ஸ் நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக இலங்கையைச் சேர்ந்தவர் பதவியேற்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சீசெல்ஸ் நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு புதிய வதிவிடமற்ற நீதியரசர்களில் ஒருராக இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொரீசியஸை சேர்ந்த கருணா குணேஸ் பாலகி என்பவரும் இலங்கையைச் சேர்ந்த ஜனக் டி சில்வா உள்ளிட்ட இருவருமே நீதியரசராக பதிவியேற்றுள்ளனர்.
பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் கருத்து வெளியிட்ட நீதிபதி ஜனக் டி சில்வா தமது நாட்டிற்கு வெளியே வித்தியாசமான அனுபவங்களைப் பெறுவதற்கு இது ஒரு வாய்ப்பாக இதனை தாம் பார்ப்பதாக கூறியுள்ளார்.
ஜனக் டி சில்வா இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



