சிவனொளிபாத மலைபருவ காலம் ஆரம்பமாகவுள்ளது!

#SriLanka #Festival #weather
Mayoorikka
2 years ago
சிவனொளிபாத மலைபருவ காலம் ஆரம்பமாகவுள்ளது!

எதிர்வரும் 26 ம் திகதி பௌர்ணமி நாளில் சிவனொளிபாத மலைபருவ காலம் ஆரம்பமாகவுள்ளது. அதனை தொடர்ந்து மின்சார சபையின் ஊழியர்கள் நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடி பாத மலை உச்சிவரை மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதே போல் தேசிய நீர் வடிகால் திணைக்களம் சுத்தமான குடிநீர் வழங்கும் பணியை செய்து வருகின்றனர்.

 யாத்திரிகர்கள் நலன் கருதி சகல வசதிகளும் செய்து கொடுக்க மஸ்கெலியா பிரதேச சபை முன்வந்து உள்ளது. 

ஹட்டன் அரச பேருந்து நிலையம் அதிகாரிகள் நல்லதண்ணி நகரில் பயணிகள் நலன் கருதி தரிப்பிட வசதிகள் செய்து கொண்டுள்ளனர். 

பணிகள் யாவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4