சிகிச்சைக்காக சென்ற நோயாளர்களை திருப்பி அனுப்பிய கொழும்பு தேசிய வைத்தியசாலை!

#SriLanka #Colombo #Hospital
PriyaRam
2 years ago
சிகிச்சைக்காக சென்ற நோயாளர்களை திருப்பி அனுப்பிய கொழும்பு தேசிய வைத்தியசாலை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்றாம் மாடியில் உள்ள ஆய்வுகூடத்தில் குளிரூட்டும் முறைமை பராமரிக்கப்படாத காரணத்தினால், அதன் நிர்வாகம் நோயாளிகளை திருப்பி அனுப்பியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிடம் வினவிய போது, ​​குளிரூட்டும் அமைப்பில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

images/content-image/2023/12/1701940880.jpg

அண்மைய நாட்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டாலும் வாயுக் கசிவு அப்படியே இருப்பதாக அதன் பராமரிப்பை மேற்கொள்ளும் சீன நிறுவனம், மருத்துவரிடம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குளிர்சாதன அமைப்பை மீட்டெடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் தருமாறு சீன நிறுவனம் கோரிக்கை விடுத்ததாக அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4