பாராளுமன்றத்தில் பெண்கள் துஷ்பிரயோக விவகாரம்: விசாரணைகளை பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்க தீர்மானம்

#SriLanka #Police #Parliament #Investigation #Abuse #Sexual Abuse
Mayoorikka
2 years ago
பாராளுமன்றத்தில் பெண்கள் துஷ்பிரயோக விவகாரம்: விசாரணைகளை பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்க தீர்மானம்

பாராளுமன்றத்தின் பராமரிப்பு திணைக்களத்தின் அழகிய பணிப்பெண்கள் சிலரை அதிகாரிகள் சிலர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்க பாராளுமன்ற தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

 இந்த விசாரணை தொடர்பான கோப்புகள் அண்மையில் சட்டமா அதிபரிடம் பாராளுமன்ற தலைவர்களினால் கையளிக்கப்பட்டது. 

சம்பவம் தொடர்பில் போதிய சாட்சியங்கள் இருப்பதாகத் தோன்றுவதால், விசாரணைகளை பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் நாடாளுமன்றத் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதன்படி, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான அனைத்து கோப்புகளும் இன்றும் நாளையும் பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக, பார்லிமென்ட் ஹவுஸ் கீப்பிங் திணைக்கள உதவியாளர் உட்பட இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அந்தத் துறையைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் புகார் அளித்தனர். 

இச்சம்பவம் முதலில் நாடாளுமன்றத்தின் உள்ளக விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டது. தற்போதைய விசாரணைகளில் இந்த சம்பவத்தில் வேறு சிலரின் பெயர்கள் கூறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4