சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இன்று கூடுகிறது!
இலங்கைக்கு 48 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட கடன் வசதியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பான முதலாவது மீளாய்வுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இன்று (12.12) கூடவுள்ளது.
இது சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் காலெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் கீழ் செயல்திறன் அளவுகோல்களைப் பின்பற்றுவதில் இருந்து விலக்குகள் மற்றும் மாற்றங்கள், நிதி உத்தரவாதங்களை மதிப்பாய்வு மற்றும் திருத்தம் குறித்து கருத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை வங்குரோத்து நாடாக மாறியதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் படி சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க தீர்மானித்திருந்தது.
அதன் முதல் தவணை கிடைக்கப்பெற்ற நிலைியல், 330 மில்லியன் அமெரிக்க டாலர்களை இரண்டாவது கடனாக வெளியிடுவது குறித்தே இன்றைய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் கடன் வழங்குநர்கள் கூடி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கடன் வழங்குநர்கள் பூர்வாங்க உடன்பாட்டை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய ஒப்பந்தங்கள் நிலுவையில் உள்ள பொதுக் கடனில் சுமார் $5.9 பில்லியனை உள்ளடக்கும் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்கவும் வட்டி விகிதங்களைக் குறைக்கவும் கடனாளர்களுடன் இறுதி ஒப்பந்தத்தை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே