வெள்ளத்தில் மூழ்கும் பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதி : அனர்த்த முகாமைத்துவம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
#SriLanka
#Batticaloa
#Lanka4
#Flood
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதியின் குறுக்கே கல்லல்லை பாலத்திற்கு அருகில் சுமார் ஒரு அடி நீர்மட்டம் காணப்படுவதாகவும், அதனை கருத்திற்கொண்டு மறு அறிவித்தல் வரை கல்லல்லை பகுதியிலிருந்து வீதி மூடப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.