பேருந்துகளில் சிசிடிவி கமரா பொருத்தும் திட்டம்!
#SriLanka
#government
#Bus
#Lanka4
#CCTV
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
வன்முறை மற்றும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையின் பெருமளவான மாணவர்கள் போசாக்கு குறைப்பாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில் புரோட்டின் நிறைந்த போசாக்கான உணவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க எதிர்பார்கின்றோம்.
அதேபோல் பெண்கள் வௌிநாடு செல்லும் போது 05 வயதுக்கு குறைவான குழந்தைகளிருக்கும் எத்தனை தாய்மார் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பது தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலக மட்டத்தில் தேடி அறியவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.