இணையவழி கடன் மோசடிகளை தடுக்க புதிய நடைமுறை!

#SriLanka #Crime #Lanka4 #online
Mayoorikka
2 years ago
இணையவழி கடன் மோசடிகளை தடுக்க புதிய நடைமுறை!

இணையவழி கடன் மோசடிகளை தடுக்கும் வகையில் புதிய அதிகாரங்களுடன் கூடிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

 இலங்கை நிகர நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை சட்டமூலம் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், ஆனால் இணையவழி கடன் போன்ற விடயங்களை சட்டமூலத்தின் மூலம் முழுமையாக உள்ளடக்க முடியாது எனவும் சேமசிங்க தெரிவித்தார்.

 இணையவழி கடன் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4