அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தீர்வில்லை : தொடரும் சுகாதார ஊழியர்களின் போராட்டம்!

#SriLanka #Health #Hospital #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Workers
Thamilini
2 years ago
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தீர்வில்லை : தொடரும் சுகாதார ஊழியர்களின்  போராட்டம்!

தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதால் திட்டமிட்டபடி 24 மணித்தியால வேலைநிறுத்தத்தை தொடரவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. 

சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன மற்றும் பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தொழிற்சங்க பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். 

அதன்படி இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பமான சுகாதார பணிப்புறக்கணிப்பு நாளை காலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4