ஜனநாயகத்தை பறிக்கும் சட்டம்: யாழில் கவனயீர்ப்பு போராட்மொன்று முன்னெடுப்பு!

#SriLanka #Jaffna #Protest #Province #Lanka4 #Social Media
Mayoorikka
2 years ago
ஜனநாயகத்தை  பறிக்கும் சட்டம்: யாழில் கவனயீர்ப்பு போராட்மொன்று முன்னெடுப்பு!

நிகழ்நிலைக் காப்புப் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்மொன்று இன்று(24) முன்னெடுக்கப்பட்டது.

 இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்துள்ள உத்தேச நிகழ்நிலைக் காப்புப் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் கிறீஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று(24) காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

images/content-image/2023/1706080270.jpg

 ஜனநாயக உரிமையை பறிக்கும் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை மீளப்பெறு, நாட்டு மக்களை அச்சமூட்டும் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை மீளப்பெறு, சட்டமாக்க வேண்டாம் சட்டமாக்க வேண்டாம் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சட்டமாக்க வேண்டாம், ஜனநாயகத்தை சிதைக்காதே போன்ற வாசகங்களுடன் கூடிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இப் போராட்டத்தில் யாழ் கிறீஸ்தவ ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4