இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் உறவினர்களை சந்தித்தார் ரணில்!

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #lanka4Media
Thamilini
2 years ago
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் உறவினர்களை சந்தித்தார் ரணில்!

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் உறவினர்களை சந்திப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (25.01) அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். 

அமைச்சரின் இறுதிக் கிரியைகள் வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்று (25.01) காலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் சென்று கொண்டிருந்த கொள்கலன் கார் மற்றும் வீதியின் பாதுகாப்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4