தற்போதைய ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை கொன்று குவித்து வருகின்றனர் - சட்டத்தரணிகள் சங்கம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தற்போதைய ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை கொன்று குவித்து வருகின்றனர் - சட்டத்தரணிகள் சங்கம்!

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டில் ஜனநாயகத்தை படிப்படியாக கொன்று குவித்து வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அதன் முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி  சாலிய பீரிஸ், இணையம் ஒன்றுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டு இந்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். 

 நீதித்துறையை அச்சுறுத்தி, நிறுவன அமைப்பை பலவீனப்படுத்தி, பல்வேறு அடக்குமுறை கட்டளைகளை நிறைவேற்றி ஆட்சியாளர்கள் நாட்டில் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 சட்டமா அதிபரின் நடவடிக்கைகள் தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4