பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் உயிரிழப்பு
#Death
#Accident
#Lanka4
#Brazil
#Helicopter
#L4
Prasu
59 minutes ago
ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று கொலம்பிய சுற்றுலாப் பயணிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மிகவும் அடர்ந்த தாவரங்களைக் கொண்ட மலைப்பகுதி காடான திஜூகா தேசியப் பூங்காவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானியும் மூன்று பெண்களும் "தீயில் கருகி உயிரிழந்தனர்" என்பதை தீயணைப்பு வீரர்கள் உறுதிப்படுத்தினர்.
ரியோ டி ஜெனிரோவில் உள்ள கொலம்பியாவின் தூதரகத் தலைமை அதிகாரி டயானா பேஸ், அந்த மூன்று பெண்களும் ஒரு சிறுமியின் 15வது பிறந்தநாளைக் கொண்டாட பிரேசிலிய நகரத்திற்குப் பயணம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே