பாரம் துாக்கியில் சிக்கித்தவித்த பிரான்ஸ் ஈபிள் கோபுர ஊழியர்கள்
#France
#France Tamil News
#Workers
#EiffelTower
Mugunthan Mugunthan
4 months ago
![பாரம் துாக்கியில் சிக்கித்தவித்த பிரான்ஸ் ஈபிள் கோபுர ஊழியர்கள்](https://ms.lanka4.com/images/thumb/2024/02/1709124726.jpg)
ஈஃபிள் கோபுர ஊழியர்கள் கோபுரத்துக்கு நடுவே சிக்குண்டு இரவு முழுவதும் தவித்துள்ளனர். இச்சம்பவம் இடம் பெற்று பத்து நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், அது தொடர்பான தகவல்கள் தற்போதே வெளியாகியுள்ளன.
ஈஃபிள் கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் பயணிபுரியும் ஊழியர்கள் மூவர், பெப்ரவரி 16 - 17 ஆம் திகதிக்குட்பட்ட இரவில், கோபுரத்தில் இருந்து கீழே இறக்க முற்பட்டனர். பாரம்தூக்கியில் அவர்கள் கீழிறங்க முயற்சித்த வேளையில் அவர்கள் பாரம்தூக்கிக்கிக்குள் சிக்கிக்கொண்டனர்.
பாரம் தூக்கி இயங்க மறுத்தது.
அதிகாலை 3.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை அவர்கள் அங்கு சிக்கிக்கொள்ள நேர்ந்தது.
தீயணைப்பு படையினர் உடனடியாக அழைக்கப்பட்ட போதும், மீண்டும் பணி மிகுந்த சவாலாக இருந்தது. கிட்டத்தட்ட நான்கரை மணிநேரங்களின் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.