ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து வெளியான தகவல்!
#SriLanka
#SLPP
Mayoorikka
2 years ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த கட்டத் திட்டங்கள் மே தினத்திற்கு பின்னர் அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
அறிஞர் மூத்த எழுத்தாளர் கலாநிதி திவானி ஹெட்டிகே எழுதிய சிசு-குரு கற்றல் தொடர்பாடல் முறைமைகள் மற்றும் விழுமியங்களை மேம்படுத்துதல் என்ற அறிவார்ந்த நூலின் வெளியீட்டு விழா கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.