புகலிடக்கோரிக்கையாளர்களை கைது செய்யும் பிரித்தானிய அதிகாரிகள்!

#Arrest #Refugee #Britain
Mayoorikka
2 years ago
புகலிடக்கோரிக்கையாளர்களை கைது செய்யும் பிரித்தானிய அதிகாரிகள்!

புகலிடக்கோரிக்கையாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பிரித்தானிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

 புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்பும் நடவடிக்கைகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைகின்றது.

 இந்நிலையில், புகலிடக்கோரிக்கையாளர்களுடன் முதலாவது விமானம் ஜூலை மாதம் முதல் வாரம் ருவாண்டா செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 மேலும் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதியில்லாதவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளில் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கைது நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டால் விமானங்களை ருவண்டாவிற்கு விரைவில் அனுப்பலாம் என உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் கிலெவெர்லி குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4