பிரித்தானியாவில் பிரசவத்தின்போது ஏற்பட்ட வெட்டுக்காயங்கள் : இழப்பீடு வழங்கிய மருத்துவமனை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பிரித்தானியாவில் பிரசவத்தின்போது ஏற்பட்ட வெட்டுக்காயங்கள் : இழப்பீடு வழங்கிய மருத்துவமனை!

பிரித்தானியாவின் Wrexham நகரைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு பிரசவத்தின்போது ஏற்பட்ட வெட்டுக்காயங்களுக்காக அரை மில்லியன் பவுண்டுகளுக்கு மேல்  வழங்கப்பட்டுள்ளது. 

மகப்பேறு சேவைகள் மற்ற மருத்துவமனைத் துறைகளை விட அதிக அலட்சிய போக்கை இது காட்டுவதாக நிபுணர்கள் விமர்சித்துள்ளனர். 

ஏமி ஸ்டெட் என்ற 37 வயதுடைய பெண் ஒருவர் 03 வருடங்கள் காத்திருந்து குழந்தை ஒன்றை ஈன்றுள்ளார். இந்நிலையில் அவர் பிரசவ நேரத்தில் பல வெட்டுக்காயங்களுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனது மகப்பேறு மருத்துவர் "வெளியேறுவதற்கான அவசரத்தில் இருந்தமையால் தனக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டதாக ஸ்டெட் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், சுமார் ஐந்து வருடங்கள் கழித்து மேற்படி இழப்பீட்டை பெற்றுக்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4