பிரித்தானியாவில் சட்டவிரோத புலம்பெயர்வை கட்டுப்படுத்த புதிய திட்டத்தை கையில் எடுக்கும் தொழிற்கட்சி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

புலம்பெயர்வோரை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு அழைத்துவரும் கும்பல்களை கட்டுப்படுத்த புதிய எல்லைப் பாதுகாப்புக் கட்டளையை உருவாக்கவுள்ளதாக தொழிற்கட்சி அறிவித்துள்ளது.
முன்னாள் போலீஸ், இராணுவம் அல்லது உளவுத்துறை தலைவர் தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் புதிய அதிகாரங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அதிகாரங்கள் அதிகாரிகளை எல்லையில் நிறுத்த மற்றும் தேடுதல் நடத்தவும், நிதி விசாரணைகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



