மீன ராசியினருக்கு வழிபாடு நன்மை தரும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
5 months ago
மீன ராசியினருக்கு வழிபாடு நன்மை தரும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: முன்னேற்றமான நாள். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். வழக்கு சாதகமாகும் எதிர்பார்ப்பு நிறைவேறும். பரணி: புத்தி சாதுரியத்துடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வேலை பளுவால் சங்கடம் தோன்றும். திட்டமிட்ட செயல் லாபமாகும்.கார்த்திகை 1: முயற்சி வெற்றியாகும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நம்பிக்கை அதிகரிக்கும் நாள். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். ரோகிணி: எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள். நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். உங்கள் எண்ணம் நிறைவேறும். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் நாள். நிதிநிலை உயரும். திருவாதிரை: பதட்டமின்றி செயல்பட்டு பலன் காண வேண்டிய நாள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும்.புனர்பூசம் 1,2,3: முயற்சி வெற்றியாகும் நாள். பழைய பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்.

கடகம்

புனர்பூசம் 4: குழப்பம் விலகும் நாள். மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்.பூசம்: வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். வருமானம் உயரும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.ஆயில்யம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.

சிம்மம்

மகம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பணவரவு அதிகரிக்கும். தாராளமாக செலவு செய்வீர்கள்.பூரம்: விழிப்புடன் செயல்பட்டு விரயங்களைத் தவிர்க்க வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிக்கு ஆளாவீர்.உத்திரம் 1: தெய்வ வழிபாட்டால் நன்மை காணும் நாள். வியாபாரத்தில் உண்டான தடை விலகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்.அஸ்தம்: செயல்களில் சில சங்கடம் தோன்றும். கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்.சித்திரை 1,2: சிந்தித்து செயல்படுவீர். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வருவாய் அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த வருவாய் வரும் நாள்.சுவாதி: பணிபுரியும் இடத்தில் சில சங்கடம் தோன்றும். தேவையற்ற பிரச்னை உங்களைத்தேடி வரும்.விசாகம் 1,2,3: சாதுரியமாக செயல்படுவீர். மற்றவர்களை அனுசரித்துச் சென்று நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் செயலில் லாபம் காண்பீர். பகைவர் உங்களை விட்டு விலகிச்செல்வர். எதிர்பார்த்த பணம் வரும் நாள்.அனுஷம்: மனச்சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். அனுகூலம் உண்டாகும் நாள்.கேட்டை: வேலைகளில் திடீரென இழுபறி நிலை உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

தனுசு

மூலம்: சங்கடம் நீங்கும். முயற்சிகளில் ஏற்பட்ட தடை விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.பூராடம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உதவி செய்வதாக சொன்னவர் கடைசி நேரத்தில் காணாமல் போவார்.உத்திராடம் 1: போராடி வெற்றிபெறும் நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவதால் நன்மை உண்டாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: தடைகளைத் தாண்டி வெற்றி அடையும் நாள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.திருவோணம்: நிதானமாக செயல்பட்டு நன்மை அடையும் நாள். தம்பதிகளுக்குள் பிரச்னை தோன்றி விலகும்.அவிட்டம் 1,2: எண்ணம் நிறைவேறும் நாள். இழுபறியாக இருந்த முயற்சி லாபமாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவர்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்வர். வழக்கு விவகாரத்தில் சாதகம் தோன்றும்.சதயம்: போட்டியாளர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர். கடைசி நிமிடத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.பூரட்டாதி 1,2,3: தொழிலில் உண்டான தடை விலகும். புதிய வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி லாபம் தரும். ரேவதி: எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். முயற்சியில் தடைகளும் தாமதமும் உண்டாகும். வழிபாடு நன்மை தரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!