இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இருநூறுக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இருநூறுக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்!

இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் பிரச்சாரம் கூறுகிறது.  

அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் நிருபா பல்லேவத்த குறிப்பிட்டுள்ளார்.  

2023 ஆம் ஆண்டில், 1,580 தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் புதிதாக கண்டறியப்பட்டவர்கள். 

அதாவது 1,520 புதிய நோயாளிகள். மேலும், 1,580 இல் 180 குழந்தைகள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4