வெள்ள நிலைமை காரணமாக தொற்றுநோய் ஏற்படும் அபாயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெள்ள நிலைமை காரணமாக தொற்றுநோய் ஏற்படும் அபாயம்!

தற்போதைய வெள்ள நிலைமையுடன் நீர் ஆதாரங்கள் மாசுபடுவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.  

முடிந்தவரை காய்ச்சிய நீரை அருந்த நடவடிக்கை எடுக்குமாறு அதன் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் கீதிகா ரத்னவர்தன தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இன்றைய நாட்களில், நீர் ஆதாரங்கள் மாசுபடுவதால், வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. 

எனவே, முடிந்தவரை, கொதிக்கவைத்த தண்ணீர் அல்லது பாட்டில் நீரை குடிக்கவும். பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகள் முன் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். 

இந்த நாட்களில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும், அதை சுத்தம் செய்ய வேண்டும், பொது சுகாதார ஆய்வாளர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்."என தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4