வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 25 சதவீதம் ஓய்வு பெற்ற போர் வீரர்களுக்காக ஒதுக்கீடு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 25 சதவீதம் ஓய்வு பெற்ற போர் வீரர்களுக்காக ஒதுக்கீடு!

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 25 வீதம் ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.  

அதன்படி, முதல் குழு இம்மாத இறுதியில் இஸ்ரேல் செல்லவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓய்வூதியம் மற்றும் மருத்துவ அடிப்படையில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்களை ஆராயும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

போர் பாதுகாப்பு அமைச்சு, ஆயுதப் படைகள், போர் வீரர்கள் சேவை அதிகார சபை மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் இணைந்து போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதாரம், பொது நிர்வாகம், ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக  பிரமித பண்டார தென்னகோன் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் காணிகளுக்கான 'பரம்பரை' திட்டத்தின் கீழ், போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கி தற்போது அனுபவிக்கும் காணிகளுக்கான உரிமைக்கான அனுமதிப்பத்திரம் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 

நிலங்கள் 100 ரூபாய் சிறப்பு பெயரளவு வரிக்கு உட்பட்டது. அத்துடன், சேவையில் ஈடுபடுவோர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் விசேட கடன் வசதிகளை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4