நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் 200 தொழிற்சங்கங்கள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் 200 தொழிற்சங்கங்கள்!

200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளை  (09) சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. 

நிறைவேற்று தர அதிகாரிகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவை அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளன. 

கிராம உத்தியோகத்தர்கள், சர்வேயர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தபால் ஊழியர்கள் உட்பட அரச சேவையில் உள்ள பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் இணை அழைப்பாளர்  சந்தன சூரியஆராச்சி தெரிவித்தார்.  

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் நேற்று  (07.07 ) மாலை 4 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். 

இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது 1980 ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் இடம்பெறும் மிகப் பெரிய வேலை நிறுத்தமாக இருக்கும் என இலங்கை அரச அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர்  சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.  

இதேவேளை, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. இன்றைய தினம் அமுல்படுத்தப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரச ஊழியர்கள் ஆதரவு தெரிவித்த போதிலும் தாம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதில்லை என  மடிவத்த தெரிவித்தார்.  

இதேவேளை, எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்கிழமை சுகயீன விடுமுறையை அறிவிக்க ஆசிரியர் – அதிபர் சங்கங்களும் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

 எவ்வாறாயினும் நாளைய  தினமும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சுகாதாரத் துறையில் உள்ள எந்தவொரு தொழிற்சங்கமும் ஆதரவளிக்காது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.  

இந்த வேலைநிறுத்தங்களை அங்கீகரிக்க முடியாது என்றும் ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4