யுக்திய நடவடிக்கையில் 789 சந்தேக நபர்கள் கைது!

#SriLanka #Arrest #Police #Crime
Mayoorikka
2 years ago
யுக்திய நடவடிக்கையில்  789 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் 789 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 கைது செய்யப்பட்டவர்களில் 771 ஆண்களும் 18 பெண்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 27 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 66 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

 சந்தேக நபர்களிடமிருந்து 251 கிராம் 219 மில்லிகிராம் ஹெரோயின், 415 கிராம் 59 மில்லிகிராம் ஐஸ், 13,684 கிராம் 253 மில்லிகிராம் கஞ்சா மற்றும் 284 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4