யாழ். போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு முக்கிய சத்திர சிகிச்சை நிலையம் ஆரம்பிப்பு!

#SriLanka #Jaffna #Hospital
Mayoorikka
2 years ago
யாழ். போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு முக்கிய சத்திர சிகிச்சை நிலையம் ஆரம்பிப்பு!

இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 இலங்கையில் இவ்வாறான சிகிச்சை நிலையம் மகரகம வைத்தியசாலை மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆகிய இரண்டில் மாத்திரம் காணப்படுகின்றது. 

images/content-image/2024/07/1720761469.jpg

இது இலங்கையின் மூன்றாவது நிலையமாக பதிவு பெறுகின்றது. இவ்வாறான சிகிச்சையை தனியார் வைத்தியசாலை அல்லது இந்தியாவில் போன்ற வெளிநாடுகளில் பெறுவதாயின் பல மில்லியன் செலவீனம் ஏற்படும். இந்த சிகிச்சை மிகவும் சிக்கலான ஒரு விடயங்களை கொண்டுள்ளது. 

images/content-image/2024/07/1720761484.jpg

 இரண்டு விஷேட படுக்கை அறைகளை கொண்டுள்ளது. ஆகவே மாதம் ஒன்றில் இருவருக்கு மாத்திரம் சிகிச்சை செய்யமுடியும். சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வைத்திய நிபுணர்களின் கடுமையான முயற்சியில் பல சிரமங்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2024/07/1720761502.jpg

 சுகாதார அமைச்சர் Dr. ரமேஸ் பத்திரன அவர்களால் வைபவ ரீதியாக எதிர்வரும் கிழமை திறந்து வைக்கப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4