சுகாதார அமைச்சுக்கு எச்சரிக்கை விடுத்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா

#Protest #Hospital #doctor #Chavakachcheri
Prasu
2 years ago
சுகாதார அமைச்சுக்கு எச்சரிக்கை விடுத்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா

சுகாதார அமைச்சினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நல்லூரில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வோம் என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வைத்திய நிர்வாகிகள் குறித்து சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையேல், 25ஆம் திகதி காலை நல்லூரில் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படும். 

 இது மக்கள் போராட்டமாக மாறும். இது வரலாறாக மாறும். மேலும், இந்த போராட்டத்தில் தன்னையே அர்ப்பணித்து ஆகுதியாக மாறவும் தயார்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4