தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்றுடன் முடிவு!

#SriLanka #Election
Mayoorikka
1 year ago
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்றுடன் முடிவு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய அனைத்து வாக்காளர்களும் தங்களது தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்களிலிருந்தும், மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலிருந்தும் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4