100 தொழிலாளர்கள் தென்கொரியாவிற்கு பயணம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
100 தொழிலாளர்கள் தென்கொரியாவிற்கு பயணம்!

தென் கொரியாவில் உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்ற மேலும் 100 இலங்கையர்கள்  தென் கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.  

இந்தக் குழுவில் 08 யுவதிகளும் உள்ளடங்குவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 3,694 பேர் தென் கொரியாவில் வேலைக்குச் சென்றுள்ளனர். 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென் கொரிய மனித வள அபிவிருத்தி சேவை நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வுக்கு அமைய, இலங்கையர்களுக்கு இந்த தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுகின்றன. 

புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், 2004 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாகவும், இம்முறை 873 ஆவது குழு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4