கிரீஸில் பற்றி எரியும் காடுகள் : அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கிரீஸ் தலைநகர் ஏதன்ஸ் அருகே காட்டுத்தீ வேகமாக பரவியதில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
இந்த ஆண்டு நாடு சந்தித்த ஆக மோசமான காட்டுத்தீ இதுவாகும். ஏதன்ஸின் வடக்கே நேற்று முன்தினம் காட்டுத்தீ தொடங்கியது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர 700க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு இயந்திரங்கள், நீர்க்குண்டுகளை வீசும் விமானங்கள் முதலியவை பயன்படுத்தப்பட்டன.
25 மீட்டர் உயரத்துக்குத் தீ கொழுந்துவிட்டு எரிவதால் அதனை அணைக்க வீரர்கள் போராடுகின்றனர்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே