ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பால் யாழில் மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இல்லம்

#Jaffna #House #.jeevaootru
Prasu
1 year ago
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பால் யாழில் மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இல்லம்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது பல்வேறான மனிதநேயமிக்க பணிகளையாற்றுகின்றது.

விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் கடந்த 23.08.2024 அன்று ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 122ஆவது இல்லமும் SK VLOG(YouTube Channel) இனது 0️1ஆவது இல்லமும் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

images/content-image/1724444476.jpg

இவ் இல்மானது யாழ் இணுவில் பகுதியில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி உதவியை SK VLOG மூலம் சுவிஸ் தேசத்தில் வாழ்கின்ற சகோதரி துசித்தா ஜெயக்குமார் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

images/content-image/1724444493.jpg

இவ் மகத்தான உதவியினை நல்கிய சகோதரிக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4