உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

தேர்தலுக்கு தேவையான பணம் ஆணைக்குழுவிடம் இல்லை என அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

தேர்தலுக்குச் செய்த அடிப்படைச் செலவுகளைத் தவிர, மீதிப் பணம் அனைத்தும் கருவூலத்தில் திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டதாக அவர் கூறுகிறார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த சில வேட்பாளர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார். 

 மேலும் சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4