வரலாற்றில் இன்றைய நாளின்(02.9.2024) சிறப்பு!

#world_news #history #Coconut
Mayoorikka
1 month ago
வரலாற்றில் இன்றைய நாளின்(02.9.2024)  சிறப்பு!

செப்டம்பர் 2 (September 2) கிரிகோரியன் ஆண்டின் 245 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 246 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 120 நாட்கள் உள்ளன.

 இன்று முக்கிய தினமாக உலக தேங்காய் தினம் உள்ளது. நாம் உண்ணும் முக்கிய பொருட்களில் ஒன்று தேங்காய். நமது நாடு உட்பட உலகில் முழுவதும் பலவிதமான உணவுகளில் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. 

தேங்காயுடன் இனிப்பு உணவுகள் தயாரிப்பது முதல் கயிறுகள் செய்ய தேங்காய் நாரைப் பயன்படுத்துவது வரை பல விதங்களில் பயன்படுகிறது. ஒவ்வொரு துளி தேங்காயையும் பயன்படுத்தலாம், 

மேலும் இது மிகவும் சத்தான உணவாகும். இதன் நன்மைகளைப் புரிந்துகொள்வதற்கும் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. 

 தேங்காய் தினத்தின் வரலாறு:

 இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் (APCC), ஆசிய நாடுகளில் தேங்காய்களின் வளர்ச்சி, உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதியை ஆதரிப்பதற்காக 1969 இல் நிறுவப்பட்டது.

 2009 ஆம் ஆண்டில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் தினத்தை கொண்டாடும் முயற்சியை ஆந்திர பிரதேச காங்கிரஸ் தொடங்கியது. இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, கென்யா மற்றும் வியட்நாம் ஆகியவை APCC இல் உறுப்பினர்களாக உள்ள சில நாடுகளாகும். உலக தேங்காய் தினம் விவசாயிகள் மற்றும் தென்னை வளர்ப்பு வணிகத்தில் பங்குதாரர்களால் கொண்டாடப்படுகிறது. 

தேங்காய்களை உட்கொள்வதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளுடன் மக்கள் நாளைத் திட்டமிடுகிறார்கள்.

 மேலும் இன்றைய நாளின் மேலும் பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன அவை வருமாறு:

 கிமு 44 – எகிப்தின் பாரோ ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை அரசனாக்கினாள்.

 கிமு 31 – கிரேக்கத்தின் மேற்குக் கரையில் ஒக்டேவியனின் படைகள் மார்க் அந்தோனி, மற்றும் கிளியோபாத்ராவின் படைகளைத் தோற்கடித்தனர்.

 1642 – இங்கிலாந்து நாடாளுமன்றம் லண்டன் நாடக அரங்குகள் அனைத்தையும் மூடிவிட உத்தரவிட்டது. 1666 – இலண்டன் பெரும் தீ: லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித போல் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.

 1752 – கிரெகொரியின் நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 1792 – பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற கலவரங்களில் மூன்று ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்கள் கொல்லப்பட்டனர். 1806 – சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட நிலசரிவில் 457 பேர் கொல்லப்பட்டனர்.

 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அட்லாண்டாவை விட்டு விலகிய அடுத்த நாள் அமெரிக்கப் படைகள் அங்கு போய்ச் சேர்ந்தன.

 1870 – பிரான்சில் செடான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரஷ்யப் படையினர் பிரான்சின் மன்னனான மூன்றாம் நெப்போலியனையும் அவனது படையினர் 100,000 பேரையும் கைது செய்தனர்.

 1885 – வயோமிங் மாநிலத்தில் 150 வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள் வெளிநாட்டு சீனத் தொழிலாளர்களைத் தாக்கி அவர்களில் 28 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தினர். பல நூற்றுக் கணக்கானோர் நகரை விட்டுத் தப்பியோடினர்.

 1898 – பிரித்தானிய மற்றும் எகிப்தியப் படைகள் சூடானிய பழங்குடியினரைத் தாக்கி அந்நாட்டில் பிரித்தானிய மேலாண்மையை ஏற்படுத்தினர்.

 1935 – புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 423 பேர் கொல்லப்பட்டனர். 1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான முற்றுகையை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாசி செருமனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

 1945 – இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. ஜப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் “மிசூரி” என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.

 1945 – வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் (வடக்கு வியட்நாம்) ஹோ சி மின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.

 1946 – பிரித்தானிய இந்தியாவில் சவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.

 1951 – எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். 1958 – அமெரிக்காவின் விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மீனியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது. 1965 – பாகிஸ்தான் படையினர் இந்தியாவின் காஷ்மீருக்குள் நுழைந்தனர்.

 1967 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தன்னியக்கப் பணம் வழங்கி நியூயோர்க்கில் அமைக்கப்பட்டது.

 1970 – சந்திரனுக்கான அப்பல்லோ 15 விண்கப்பலின் திட்டம் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது.

 1990 – மால்டோவாவின் ஒரு பகுதியான திரான்ஸ்னிஸ்திரியா தன்னிச்சையாக வெளியேறி தன்னை சோவியத்தின் ஒரு குடியரசாக அறிவித்தது. ஆனாலும் இதனை சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பசோவ் ஏற்கவில்லை. இன்று வரையில் இது எந்த நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை.

 1992 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் குறைந்தது 116 பேர் உயிரிழந்தனர்.

 1996 – பிலிப்பீன்ஸ் அரசுக்கும் மோரோ தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

 1998 – நோவா ஸ்கோசியாவில் சுவிட்சர்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 229 பேரும் கொல்லப்பட்டனர்.

 2006 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடற்சமரில் இலங்கைக் கடற்படையின் 2 டோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.

 பிறப்புக்கள்

 1838 – லில்லியுகலானி, அவாய் ஆட்சியாளர் (இ. 1917) 1866 – சாள்ஸ் வின்சன்ட், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டாளர் (இ. 1943) 1913 – இசுரேல் கெல்ஃபாண்ட், உருசிய கணிதவியலர் (இ. 2009) 1952 – ஜிம்மி கான்னர்ஸ், அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர் 1964 – கேயானு ரீவ்ஸ், கனேடிய நடிகர் 1966 – சல்மா ஹாயெக், மெக்சிக்க-அமெரிக்க நடிகை 1969 – ஸ்டீபன் பியல், சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர் 1973 – இந்திக டி சேரம், இலங்கைத் துடுப்பாட்ட வீரர் 1988 – இஷாந்த் ஷர்மா, இந்துயத் துடுப்பாட்ட வீரர் இறப்புகள் 1969 – ஹோ சி மின், வியட்நாம் தலைவர் (பி. 1890) 1973 – ஜே. ஆர். ஆர். டோல்கீன், பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1892) 1996 – பேடி கிளிஃப்ட், சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர் (பி. 1953) 2009 – ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதலமைஇச்சர் (பி. 1949) சிறப்பு நாள் வியட்நாம் – குடியரசு நாள் (1945) ஜேர்மனி – வெற்றி நாள் (1870, பிரான்சுடன் இடம்பெற்ற போரில்) திரான்ஸ்னிஸ்திரியா – விடுதலை நாள் (1990, எந்த நாட்டினாலும் இது அங்கீகரிக்கப்ப்படவில்லை)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!