பாடசாலை மாணவியை தாக்கிய ஆசியர்களுக்கு பிணை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பாடசாலை மாணவியை தாக்கிய ஆசியர்களுக்கு பிணை!

பாடசாலை மாணவி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாடசாலை ஆசிரியர்கள் இருவர் இன்று (13.09) மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

வென்னப்புவ நகருக்கு அருகில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் இரண்டு பெண் ஆசிரியைகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஒரு மாதத்திற்கும் மேலாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

சிறுமியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். 

இந்த மாணவியின் சிகிச்சைக்காக 3 இலட்சம் ரூபா கருணைக் கொடுப்பனவாக சந்தேகத்திற்குரிய ஆசிரியர்களுக்கு வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4