பரிஸில் குடியிருப்பு கட்டிடத்தில் பரவிய தீ - நால்வர் காயம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
ரயில் நிலையத்துக்கு மிக அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் தீ பரவியுள்ளது.
உடனைடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். 20 தீயணைப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருக்காபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.