தாக்குதல் அச்சம் : பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்த அறுகம்பே பிரதேசம்!

#SriLanka
Dhushanthini K
2 hours ago
தாக்குதல் அச்சம்  : பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்த அறுகம்பே பிரதேசம்!

அமெரிக்க தூதரகம் இன்று (23) விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அறுகம்பே பிரதேசத்தில் தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு படையினர் முழுமையாக அறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 எனவே அறுகம்பே பிரதேசத்தில் பல நாட்களுக்கு முன்னரே பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக குறிப்பிடப்படுகின்றது. 

 அறுகம்பை சுற்றுலாப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர்  நிஹால் தல்துவா, புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். 

 இதேவேளை, கொழும்பில் அல்லது வேறு எந்தப் பிரதேசத்திலும் இவ்வாறான விபத்து இடம்பெற்றுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், மக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திரு.நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார். 

 அறுகம்பே மற்றும் ஏனைய மாகாணங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!