நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?

#SriLanka
Mayoorikka
1 year ago
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?

இலங்கையில் சில வெளிநாட்டு பிரஜைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபையில் பேசப்பட்டது.

 இதையடுத்து, வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு, அவர்கள் உள்ள இடங்களின் பாதுகாப்பு, மத வழிபாட்டுத் தலங்களுக்கு சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு அளித்தனர்.

 இந்த பாதுகாப்பு பணிக்காக நேற்று  முதல் விசேட பாதுகாப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். இதேவேளை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4