இலங்கையில் 19 வயதான காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்!

#SriLanka
Thamilini
1 year ago
இலங்கையில் 19 வயதான காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்!

இலங்கையில் காதலியின் தலையில் கருங்கல்லினால் தாக்கி கொலை செய்த சந்தேக நபரான காதலன் இன்று (30) கைது செய்யப்பட்டதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.

பஹல்கொட, பயாகல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே தாக்குதலில் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் நடந்த இடத்தில் தலையில் அடிபட்டதாக கருதப்படும் சிறிய கருங்கல்லையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக இருவருக்கும்  இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலின் பின்னர் சந்தேகநபர் தனது நண்பருக்கு போன் செய்து காதலியை களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு 1990ம் ஆண்டு சுவாசரியா அழைத்து வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

களுத்துறை பிரிவு குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் மற்றும் பயாகல பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய பயாகல, மகொன பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4