விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka
Thamilini
1 year ago
விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2024ஆம் ஆண்டுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்குவதுஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யு.பி. ரோஹன ராஜபக்ஷ கூறுகிறார். 

 அதன் முதற்கட்டமாக விவசாயிகளுக்கு தலா 15,000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.  அம்பாறை மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் 670 விவசாயிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 630 ஹெக்டேயருக்கு 9.5 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 4,475 விவசாயிகளுக்கு 46.5 மில்லியன் ரூபாவும், மூன்றாம் கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 4,219 விவசாயிகளுக்கு 57.5 மில்லியன் ரூபாவும், நான்காம் கட்டத்தில் 4,804 விவசாயிகளுக்கு 47.7 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. 

12 மாவட்டங்களில். இன்று (04) திறைசேரியிலிருந்து 279.4 மில்லியன் ரூபா பெறப்படவுள்ளதாகவும், அது 22,419 விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 19 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் மொத்தமாக 441.8 மில்லியன் ரூபா விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4