பிரான்சில் 3 குழந்தைகளைக் கொன்ற தாய் சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்பு

#Death #France #Switzerland #Murder #Women
Prasu
1 year ago
பிரான்சில் 3 குழந்தைகளைக் கொன்ற தாய் சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்பு

பிரான்சில் மூன்று குழந்தைகளை குத்திக்கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தாய் சுவிட்சர்லாந்தில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

45 வயதான டெபோரா பெல் பிரான்ஸ்-சுவிஸ் சர்வதேச குடியுரிமையுடன் கொண்டிருந்த ஆசிரியர் ஆவார். இவர் தனிங்க்ஸ் என்ற சிறிய நகரத்தில் தனது மூன்று குழந்தைகளை (வயது 2, 11, மற்றும் 13) கொன்று தப்பிச் சென்றார்.

அழகான ஆல்ப்ஸ் பகுதியில் உள்ள இந்த வீட்டில் குழந்தைகளின் உடலை அவர்களின் தாத்தா-பாட்டி கண்டெடுத்தனர்.

குற்றச் சம்பவம் நடந்தபோது பெல், தனது ஆடி காரில் தப்பியோடியதாகவும், பின்னர் சுவிட்சர்லாந்தில் அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

அந்த பிரதேசத்தில் இருந்த சுமார் 60 பொலிஸார், ஹெலிகாப்டர் மற்றும் டைவர்களை உட்படுத்தி அவரைத் தேடினர்.

 அவரது சுவிஸ் குடியுரிமை காரணமாக சுவிஸ் அதிகாரிகளின் உதவியுடன் தேடல் இடம்பெற்றது. அவர் சுவிட்சர்லாந்துக்கு நுழையும் போது காரை கண்காணித்து கண்டுபிடித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!