தீபாவளி வரவேற்பு நிகழ்ச்சி சர்ச்சை - மன்னிப்பு கோரிய பிரித்தானிய பிரதமர் அலுவலகம்

#PrimeMinister #celebration #England #Office #DIwali #Apologizes
Prasu
5 months ago
தீபாவளி வரவேற்பு நிகழ்ச்சி சர்ச்சை - மன்னிப்பு கோரிய பிரித்தானிய பிரதமர் அலுவலகம்

பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் நடத்திய தீபாவளி வரவேற்பு நிகழ்ச்சியில் அசைவ உணவு மற்றும் மது பரிமாறப்பட்ட விவகாரத்தில், இந்திய சமூகத்தினரின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கேட்டுள்ளது.

அக்டோபர் 29 அன்று டவுனிங் ஸ்டிரீட்டில் நடந்த இந்த விழாவில், பசும்பொங்கல் மற்றும் விளக்கேற்றி வழிபாடு செய்யும் பாரம்பரிய நிகழ்வுகளுடன் பல முக்கிய இந்திய சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால், இந்த விழாவில் பரிமாறப்பட்ட மது மற்றும் அசைவ உணவுகள், குறிப்பாக ஆட்டிறைச்சி கபாப் மற்றும் மீன், பலருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு பிரதமர் ரிஷி சுனக் இந்த விழாவை நடத்திய போது, மத மற்றும் பாரம்பரிய உணர்வுகளை கவனித்து மது மற்றும் அசைவம் தவிர்க்கப்பட்டது.

அதற்கேற்ப, இந்த ஆண்டின் ஏற்பாடுகள் பலரின் எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்ததாக Conservative கட்சி எம்.பி. சிவானி ராஜா குறிப்பிட்டுள்ளார்.

 பிரதமர் அலுவலகம் இந்த நிகழ்வின் பிழையை ஒப்புக்கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என உறுதியளித்துள்ளது. இந்த நிகழ்ச்சி, கடந்த நான்கு மாதங்களுக்கு பிறகு லேபர் கட்சி அரசு நடத்திய முதல் தீபாவளி விழா என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!