மின்கட்டண திருத்தம் : மக்களின் கருத்துக்களை கோரும் நடவடிக்கை தொடர்கிறது!

#SriLanka #Electricity Bill
Dhushanthini K
2 months ago
மின்கட்டண திருத்தம் : மக்களின் கருத்துக்களை கோரும் நடவடிக்கை தொடர்கிறது!

ஊவா மாகாணத்தை மையமாக வைத்து இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (30) பொதுமக்களின் ஆலோசனைகளை நடத்தவுள்ளது. 

 இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான 6 மாத காலப்பகுதிக்கான மின்சார கட்டண திருத்த யோசனைக்கான பொது கலந்தாய்வு கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. 

 இதன்படி, மின்சார நுகர்வோர் உட்பட மின்சாரத் துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு வசதியாக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொது கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

 ஊவா மாகாணம் தொடர்பில் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் வாய்மொழி கருத்துக்கள் இன்று மொனராகலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 பொதுமக்களின் கலந்தாய்வின் போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு அடுத்த ஆண்டுக்கான மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் ஜனவரி 17ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!