ஓராண்டு எண்ணெய் குழாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட துருக்கி மற்றும் ஈராக்
ஈராக் பிரதமரின் உயர்மட்டப் பயணம் அங்காராவுக்குச் சென்று வந்த சில நாட்களுக்குப் பிறகு, ஈராக்கிலிருந்து துருக்கி வரை நீண்டுள்ள கிர்குக்-செய்ஹான் எண்ணெய் குழாய் வழியாக கச்சா எண்ணெய் தொடர்ந்து செல்வதை உறுதிசெய்ய, அங்காராவும் பாக்தாத்தும் ஓராண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
துருக்கிய அரசு நிறுவனமான BOTASக்கும், ஈராக்கின் அரசு எண்ணெய் நிறுவனங்களான SOMO மற்றும் NOCக்கும் இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தம் பல ஆண்டுகள் பழமையான இருதரப்பு ஒப்பந்தம் கடந்த வாரம் காலாவதியான சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது.
X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், துருக்கிய எரிசக்தி அமைச்சர் அல்பாஸ்லான் பயிரக்தார், ஈராக்கிய எண்ணெய் அமைச்சர் பாசெம் முகமது குதைருடன் அங்காராவில் நடந்த "பயனுள்ள சந்திப்பைத்" தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று குறிப்பிட்டுள்ளார்.
"இந்தக் குழாய்க்கான ஒரு புதிய நீண்டகால ஒப்பந்தத்தை நோக்கிய எங்கள் முயற்சிகள் தொடரும் அதே வேளையில் தினசரி 750,000 பீப்பாய்கள் கொள்ளளவை உள்ளடக்கிய இந்த போக்குவரத்து ஏற்பாட்டை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே