வீதியில் நடந்து சென்ற ஐவரை நோக்கி துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

#SriLanka #GunShoot
Thamilini
1 year ago
வீதியில் நடந்து சென்ற ஐவரை நோக்கி துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல பகுதியில் வீதியில் நடந்து சென்ற 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள்   இன்று (4) அதிகாலை 1 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

எனினும் இரண்டு பேர் மட்டுமே சுடப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 காயமடைந்த நபர் வெலிகம வலான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

 கப்பரதோட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

 துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4