பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் நீட்டிப்பு!

#SriLanka #Bank
Thamilini
1 year ago
பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் நீட்டிப்பு!

பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் முதன்மை வியாபாரிகளின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன மேற்பார்வை திணைக்களம் இன்று (5) பிற்பகல் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் 2025 ஜனவரி 05 ஆம் திகதி அதாவது இன்று மாலை 5:00 மணிக்கு எடுக்கப்படும். மாலை 4.30 மணி முதல் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்ளுர் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உத்தரவுகளின்படி, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!