காட்டு யானைகளை விரட்டுவதற்கு GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்த தீர்மானம்!
#SriLanka
#Elephant
Thamilini
1 year ago
அனுராதபுரத்தின் பல பகுதிகளில் காட்டு யானைகளை விரட்டுவதற்கு GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, காட்டு யானைகளுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட காலர்களை அணியும் நடவடிக்கை ஓயமடுவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு வனவிலங்கு அதிகாரிகள், இலங்கை கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து செயற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காட்டு யானைகள் நடமாடும் இடங்களை கண்டறிந்து அவற்றின் வழித்தடங்களை ஆய்வு செய்யும் நோக்கத்தில் இது அமைந்துள்ளது.