அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி விபத்து : சிறுவன் பலி!

#SriLanka #Accident
Thamilini
1 year ago
அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி விபத்து : சிறுவன் பலி!

அனுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த பஸ்ஸுடன் மோதியதில் சிறுவன் ஒருவர்  உயிரிழந்துள்ளது. 

 நேற்றிரவு (05) முச்சக்கரவண்டி வீதியைக் கடக்கின்ற நாயுடன் மோதுவதைத் தவிர்க்க முற்பட்ட வேளையில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின் இருக்கையில் பயணித்த சிறுவன் காயமடைந்த நிலையில்நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது. 

 சாரதி மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 வெலிஹேன, ஹலவத்த பிரதேசத்தில் வசிக்கும் 12 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

 பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4