தென்கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை

#Death #Murder #London
Prasu
1 year ago
தென்கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை

தென்கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் ஒருவன் இரட்டை அடுக்கு பேருந்தில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு லண்டனில் உள்ள வூல்விச்சில் A205 தெற்கு வட்டச் சாலையுடன் சந்திப்புக்கு அருகில் உள்ள வூல்விச் சர்ச் தெருவில் 472 பேருந்தில், சம்பவம் நடந்துள்ளது. 

லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்த சிறிது நேரத்திலேயே சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. 

எவரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் பொலிஸ் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் வேட்டை நடைபெற்றுவருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4