தொடங்கொட பகுதியில் உள்ள வீடொன்றை குறிவைத்து துப்பாக்கிச்சூடு!
#SriLanka
#GunShoot
Thamilini
11 months ago
தொடங்கொட, வில்பத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலும் சிறப்பு அதிரடிப் படை வீரர்களும் வரவழைக்கப்பட்டனர்.
தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.